இஸ்லாமிய புத்தக மையம்

இஸ்லாமிய மூலாதார நூல்களான ஸஹீஹுல் புகாரீ, ஸஹீஹ் முஸ்லிம், ஜாமிஉத் திர்மிதீ, தஃப்சீர் இப்னு கஸீர் ஆகியவற்றை தமிழ்கூறும் நல்லுலகுக்கு வழங்கிவரும் முன்னோடி நிறுவனமான சென்னை ரஹ்மத் அறக்கட்டளை தற்போது புதியதொரு புத்தக விற்பனை மையத்தைத் தொடங்கவுள்ளது.

அதன் தொடக்கவிழா இன்று (09-01-2011) மாலை 6.00 மணிக்கு சென்னையில் நடைபெறவுள்ளது. இப்புத்தக மைனத்தை அறிவியல் அறிஞரும், சந்திராயன் திட்ட இயக்குனருமான திரு. மயில்சாமி அண்ணாதுரை திறந்துவைக்கிறார். கவிக்கோ, அப்துர் ரஹ்மான், கவிப்பேரரசு வைரமுத்து, கவிஞர், ஈரோடு தமிழன்பன், கவிஞர், மு. மேத்தா ஆகியோர் சிறப்புரையாற்றவுள்ளனர். நிகழ்ச்சியை  B.H. அப்துல் ஹமீத் தொகுத்து வழங்கவுள்ளார்.

இப்புத்தக மையம் சென்னையின் மையப் பகுதியில் அமைந்திருப்பதோடு, சர்வதேசத் தரம் சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பித்தக்க சிறப்பம்சமாகும். மேலும், இஸ்லாத்தை சரியான முறையில் அறிவதற்கேற்ற தரமான ஆங்கில நூல்கள் இங்கு கிடைக்கிறது. அறிவுத் தாகம் உடையோர் இப்புத்தக மையம் வந்து தங்களுக்குத் தேவையான நூல்களை தேவையான தலைப்புகளில் வாங்கிச் செல்லலாம்.

தகவல்
எம்.என். முஹம்மது புகாரீ
விளம்பரம் & செய்தித் தொடர்பாளர்
ரஹ்மத் பதிப்பகம்

--
RAHMATH PATHIPAGAM CHENNAI PVT. LTD.,
6, 2ND MAIN ROAD, C.I.T. COLONY,
[SAMSUNG SERVICE CENTRE BUILDING]
MYLAPORE, CHENNAI - 600 004
Phone: +91 44 2499 7373
Mobile: +91 95000 25801
Mobile: +91 94440 25000
www.rahmath.net
buhari@rahmath.net